Saturday, 30 June 2012

இது காதல் செய்யும் நேரம் – 2



முன்குறிப்பு : இது கதையை பற்றிய முன்குறிப்பு அல்ல!
எனக்கு காதலையோ காதலர்களையோ வர்ணிக்க தெரியாது, அதனால் தயவு செய்து வர்ணனைகளை எதிர்பார்க்காதீங்க. என்னை பொறுத்த வரைக்கும் காதலர்கள் அழகோ அழகில்லையோ காதல் என்னைக்குமே அழகானதுதான், அதை வர்ணித்து ஒரு வரையறைக்குள் கொண்டு வர எனக்கு தெரியவில்லை.




மூக்கு நுனியும் காதுகளும் சிவக்க முகத்தை சரேலென்று திருப்பிகொண்டாள், அவள் திரும்பிய அதே நொடி அவளை ஆதி பார்த்து விட்டான்.”போச்சுடா இன்னைக்கு ரணகளம் தான் ” என்று மனதுள் நினைத்து கொண்டான்.ஆத்திரமும் அழுகையும் ஒன்று சேர,அதுல்யா கையில் இருந்து ஓட்ஸ் பிஸ்கட் நொறுங்க துவங்கி இருந்தது.
அவளின் நிறுத்தம் வந்ததும் திரும்பிக்கூட பார்க்காமல் இறங்கி விடு விடுவென்று நடக்க துவங்கினாள்.அவளை சமாதானப்படுத்தவில்லை என்றால் வரும் பின்விளைவுகளை அறிந்த ஆதி அவளின் நிறுத்தத்திலேயே இறங்கி நடக்க துவங்கிய நேரத்தில் அவள் ஓட துவங்கி இருந்தாள்.
இனிபொறுப்பதில்லை என முடிவு செய்து, வேக நடையிட்டு அவள் கைகளை பிடித்தான்.
“அதுல்யா கொஞ்சம் நில்லு, இப்போ என்ன ஆச்சுனு இவ்வளவு கோவப்படுற?”
“இன்னும் என்ன ஆகனும், முதல்ல கைய விடு”
அவன் பிடியிலிருந்து கைகளை விடுவிக்க அவள் திணறினாள், அவள் திமிர இவன் பிடி இறுகியது
“மரியாதையா கைய விட்டுடு.. ச்சு கடுப்பேத்தாத… உன் மூஞ்சிய பாக்கவே பிடிக்கல, விடு…” கைகளை வேகமாக உதறி நடக்க தொடங்கினாள்..
“ஹே ஏன்டி இப்படி படுத்துற.. சாரி டி .. ப்ளீஸ் டி , கொஞ்சம் நின்னு நடந்தது என்னனு கேட்டுட்டு அப்பறம் கோவப்படு”
“ஒன்னும் தேவை இல்ல..தயவு செஞ்சு என்ன விட்டுடு . நானும் உன் வழிக்கு வரல, நீயும் என்னை தொல்ல பண்ணாத. போதும் டா சாமி நான் பட்டதெல்லாம்” அவனை நோக்கி கையெடுத்து கும்பிட்டாள்.
அவளின் குவித்த கரங்களை பிடித்து ” சாரி மா புரிஞ்சிக்கோ.. நிலைமை அப்படி…”
“அப்படி என்ன !@#$% வேலை உனக்கு; காலைல இருந்து எத்தன போன் கால், எத்தனை தடவ பிங் பண்ணினேன் ” அதுல்யா வெடித்து அழ துவங்கி இருந்தாள்.
“ஹே அழாத டி..எல்லாரும் பாக்குறாங்க, முதல்ல நீ உள்ள வா”  பிடி விலகாமல் அவள் கைகளை இறுக்கி பக்கத்திலிருந்த உணவு விடுதி ஒன்றில் நுழைந்தான்.
“காலைல இருந்து கம்யுனிகேட்டர் வொர்க் ஆகல டா செல்லம், சத்தியமா! நம்பு ! யாருக்குமே பிங் பண்ண முடியல”
“ஒரு போன் பண்ணி இருக்கலாம்ல, அட்லீஸ்ட் நான் பண்ணினப்போ அட்டென்ட் பண்ணி இருக்கலாம்ல”
“போன் சார்ஜ் போட்டுருந்தேன் வீட்லயே மறந்து வச்சிட்டு வந்துட்டேன் மா”
“….”
“தேவை இல்லாம சண்டை போடாத டி.. புரிஞ்சிக்கோ”
“… ஹ்ம்ம் சரி விடு இனிமே இப்படி பண்ணாத”
“அட ராமா நான் என்ன பண்ணினேன்!!” மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.
சட்றென்று அதுல்யா முகம் மாறி ” அதெல்லாம் விடு , என்ன பஸ்ல அந்த ‘ஜாவா சுந்தரேசி’ கிட்ட இளிச்சு இளிச்சு பேசிக்கிட்டு இருந்த?”
கடவுளே அடுத்த ஏவுகணையா!!
ஆதி முழித்த முழியை பார்த்து அதுல்யா சிரிக்க தொடங்கினாள், அப்படா தப்பித்தோம் என்று அந்த சிரிப்பில் கலந்து கொண்டான் ஆதி , மகிழ்ச்சியை அழிக்க போகும் புயல் ஒன்று கரையை கடக்க காத்திருக்கின்றது என்பதை அறியாமல்……

பின்குறிப்பு: இந்த பகுதி எழுதி முடிக்கும் பொழுது.. ஒரு மாதிரி வழ வழவென்று (வள வள இல்லை) மனதில் ஒட்டாதது போல் இருந்தது, எங்கே தவறு என்று நீங்க சொன்னா  . அடுத்த முறை திருத்திக்கொள்கிறேன்.\

நேரம் வரும், காத்திருப்போம் ….

No comments:

Post a Comment