காரிடரை கடந்து வந்தும் கூட இந்த பூனைகளை காணவில்லை. காரிடரில் நுழையும்பொழுதே எங்கிருந்தோ இரண்டும் ஓடி வரும். வீட்டருகில் சென்று கதவை திறந்தபொழுது குட்டி பூனை மட்டும் கத்திக்கொண்டே பின்னால் வந்து நின்றது. உள்ளே சென்று பிரட் பாக்கெட்டில் இருந்து நாலு பிரட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். சாப்பாடு போடும் இடத்தை தெரிந்து வைத்துக் கொண்டு சரியாக அந்த இடத்திற்கு எனக்கு முன்னால் ஓடி சென்று நின்று கொண்டது. பிரட்டை பிய்த்து போட்டுவிட்டு பெரிய பூனைக்காக காத்திருந்தேன். குட்டிபூனை பிரட் துண்டுகளை அவசர அவசரமாக விழுங்கியது. இந்த குட்டி பூனை கொஞ்சம் வித்தியாசமாக சாப்பிடும்பொழுது "மௌ மௌ" என்று ஒலியெழுப்பி சாப்பிடுவது வேடிக்கையாக இருக்கும். பூனைகளுக்கு பெயர் ஏதுமில்லை; குட்டி பூனை, பெரிய பூனை என்று நிறுத்திக்கொண்டேன்.
பிரட்டை இன்னும் சிறு துண்டுகளாக பிய்த்து போட்டுவிட்டு எழுந்தபொழுது அந்த பக்கம் தாரணி வந்து நின்றாள். நான் உடனே எழுந்து சுவற்றுக்கு பின் ஒளிந்து கொண்டேன். கொஞ்சம் நேரம் விட்டு எட்டிப் பார்த்தேன். அங்கேயே நின்று கொண்டு நான் நின்ற திசையை பார்த்துக்கொண்டிருந்தாள். எட்டிக்கூட பார்க்கவில்லை. நான் மறுபடி தலையை உள்ளே இழுத்துக்கொண்டு கொஞ்சம் நேரம் கழித்து எட்டிப்பார்த்தேன். அவள் அசைய கூட இல்லை அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அவளும் என்னைப் போலவே ஒளிந்து கொண்டு விளையாட்டு காட்டுவாள் என்றெண்ணி ஏமாந்தேன். இப்பொழுது முகத்தில் கொஞ்சம் சிரிப்பு வந்திருந்தது. கொஞ்ச நேரத்திற்கு இப்படி எட்டி பார்ப்பதும் ஒளிந்துகொள்வதுமாக தொடர்ந்தது இந்த விளையாட்டு.
என்ன நினைத்தாளோ திடீரென்று சுவற்றை சுற்றிக் கொண்டு என்னை பிடிப்பது போல வந்தாள். நானும் ஓடத் துவங்கினேன். ஒரே திசையில் வராமல் எதிர்திசையில் ஓடிவருவதும் பின்னர் ஒரே திசையில் ஓடுவதுமாக இருந்தோம். அவள் என்னை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே மெதுவாக ஓடினேன். குழந்தைகளிடம் தோற்றுப் போவதை விட ஆகச் சிறந்த சந்தோசம் என்ன இருக்க முடியும் ? நான் மெதுவாக ஓடியும் அவளால் பிடிக்க முடியவில்லை. நானே எதிர் திசையில் அவளுக்கு பின்புறமாக ஓடி சென்று "பூஊஊ" என்று கத்தியபடி அவளை தூக்கிச் சுற்றினேன். ஈஈஈஈ என்று சிரித்தவள் போதும் போதும் இறக்கிவிடு என்று கைகளில் இருந்து அவளே விடுவித்துக்கொண்டாள்.
"வா இன்னொரு முறை கண்ணாமூச்சி விளையாடலாம்" என்றாள்
நான் "இது கண்ணாமூச்சிய்யா ?" என்று உதட்டை சுழித்துக் காட்டினேன்
"இல்லயா ?" என்று வாயினுள் மூன்று விரல்களை விட்டபடி இன்னொரு கையால் பாவடையை பிடித்தபடி ஒரு சுற்று சுற்றினாள்
"மூஞ்சயே மூடிக்கல இது கண்ணாமூச்சி இல்ல "
நான் எதுவுமே பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். அவளே தொடர்ந்தாள்.
"ஒளிஞ்சு பிடிச்சு விளையாட தெரியல உனக்கு. மறைஞ்சு நின்னுக்கோ நான் சொல்லி தரேன்"
எந்த மாதிரியான கண்ணாமூச்சி விளையாட்டை இவள் சொல்லித்தரப் போகிறாள் என்று யோசித்தபடி "சரி வா " என்றேன்.
"இப்போலாம் சொல்லி தர முடியாது. நாளைக்கு சொல்லி தரேன். இப்போ நான் சாப்பிட போறேன்" என்று திரும்பி நடக்க ஆரம்பித்தாள்
"அய்ய் என்ன சாப்பிட போற"
"டோஓச"
"ம்ம்ச் நான் இட்லி தான் சாப்பிடப் போறேன். நீ எனக்கு தோசை ஊத்தி தரியா"
"டோசன்னா அம்மா தான் ஊத்தி தரனும்"
"...."
"சரி சரி நீ உள்ள போ" காரிடரை தாண்டி வெளிப்பக்கமாக ஓடி மறைந்தாள்
பிரட்டை இன்னும் சிறு துண்டுகளாக பிய்த்து போட்டுவிட்டு எழுந்தபொழுது அந்த பக்கம் தாரணி வந்து நின்றாள். நான் உடனே எழுந்து சுவற்றுக்கு பின் ஒளிந்து கொண்டேன். கொஞ்சம் நேரம் விட்டு எட்டிப் பார்த்தேன். அங்கேயே நின்று கொண்டு நான் நின்ற திசையை பார்த்துக்கொண்டிருந்தாள். எட்டிக்கூட பார்க்கவில்லை. நான் மறுபடி தலையை உள்ளே இழுத்துக்கொண்டு கொஞ்சம் நேரம் கழித்து எட்டிப்பார்த்தேன். அவள் அசைய கூட இல்லை அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அவளும் என்னைப் போலவே ஒளிந்து கொண்டு விளையாட்டு காட்டுவாள் என்றெண்ணி ஏமாந்தேன். இப்பொழுது முகத்தில் கொஞ்சம் சிரிப்பு வந்திருந்தது. கொஞ்ச நேரத்திற்கு இப்படி எட்டி பார்ப்பதும் ஒளிந்துகொள்வதுமாக தொடர்ந்தது இந்த விளையாட்டு.
என்ன நினைத்தாளோ திடீரென்று சுவற்றை சுற்றிக் கொண்டு என்னை பிடிப்பது போல வந்தாள். நானும் ஓடத் துவங்கினேன். ஒரே திசையில் வராமல் எதிர்திசையில் ஓடிவருவதும் பின்னர் ஒரே திசையில் ஓடுவதுமாக இருந்தோம். அவள் என்னை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே மெதுவாக ஓடினேன். குழந்தைகளிடம் தோற்றுப் போவதை விட ஆகச் சிறந்த சந்தோசம் என்ன இருக்க முடியும் ? நான் மெதுவாக ஓடியும் அவளால் பிடிக்க முடியவில்லை. நானே எதிர் திசையில் அவளுக்கு பின்புறமாக ஓடி சென்று "பூஊஊ" என்று கத்தியபடி அவளை தூக்கிச் சுற்றினேன். ஈஈஈஈ என்று சிரித்தவள் போதும் போதும் இறக்கிவிடு என்று கைகளில் இருந்து அவளே விடுவித்துக்கொண்டாள்.
"வா இன்னொரு முறை கண்ணாமூச்சி விளையாடலாம்" என்றாள்
நான் "இது கண்ணாமூச்சிய்யா ?" என்று உதட்டை சுழித்துக் காட்டினேன்
"இல்லயா ?" என்று வாயினுள் மூன்று விரல்களை விட்டபடி இன்னொரு கையால் பாவடையை பிடித்தபடி ஒரு சுற்று சுற்றினாள்
"மூஞ்சயே மூடிக்கல இது கண்ணாமூச்சி இல்ல "
நான் எதுவுமே பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றேன். அவளே தொடர்ந்தாள்.
"ஒளிஞ்சு பிடிச்சு விளையாட தெரியல உனக்கு. மறைஞ்சு நின்னுக்கோ நான் சொல்லி தரேன்"
எந்த மாதிரியான கண்ணாமூச்சி விளையாட்டை இவள் சொல்லித்தரப் போகிறாள் என்று யோசித்தபடி "சரி வா " என்றேன்.
"இப்போலாம் சொல்லி தர முடியாது. நாளைக்கு சொல்லி தரேன். இப்போ நான் சாப்பிட போறேன்" என்று திரும்பி நடக்க ஆரம்பித்தாள்
"அய்ய் என்ன சாப்பிட போற"
"டோஓச"
"ம்ம்ச் நான் இட்லி தான் சாப்பிடப் போறேன். நீ எனக்கு தோசை ஊத்தி தரியா"
"டோசன்னா அம்மா தான் ஊத்தி தரனும்"
"...."
"சரி சரி நீ உள்ள போ" காரிடரை தாண்டி வெளிப்பக்கமாக ஓடி மறைந்தாள்






