Sunday, 29 January 2012

நினைவுகள் - 3


ரொம்ப நாள் யோசிக்காம நிம்மதியா இருந்த விஷயம் ஒன்னு திடீர்னு  அலாவுதீன் அற்புத விளக்கு பூதம் மாதிரி முன்னாடி வந்து ரொம்ப தடுமாற வச்சிடுச்சு.

ஆபீஸ் ல இருந்து வீட்டுக்கு கெளம்பின அப்பறம் ஆபீஸ்ல இருந்து வர தொலைபேசி அழைப்புகள் எப்போவுமே தொல்லைபேசி தான், வேண்டா வெறுப்பா எடுத்து பேசினேன், ஏதோ tracker பில் பண்ணனும் டீடைல்ஸ் வேணும்னு கேட்டாங்க (வருஷத்துக்கு ஒன்பத்து ரெண்டு tracker பில் பண்ணுவாங்களே இவங்க ).. ஏன்யா காலைல இருந்தே அங்கன தானே குந்திகினு இருந்தேன், எப்படி வீட்டுக்கு கெளம்பின அப்பறம் கால் பண்ணறிங்க...அட அத விடுங்க விஷயத்துக்கு வரேன் அவங்க கேட்ட விஷயம் தான் முக்கியம்.
இரண்டு கேள்விகள் (பதில் கடைசில சொல்றேன்)
1 . உங்க career Aspiration என்ன??
(நான் அப்படியே ஷாக் ஆய்டேன்)
2. Onsite போற பிளான் இருக்கா, அப்படி இருந்தா லாங் டெர்ம்ஆ ஷார்ட் டெர்ம்ஆ
(இந்த கேள்வி ஐ லைக்கோ லைக்)

உடனே சுதாரிச்சுக்கிட்டு முதல்ல இரண்டாவது கேள்விக்கு பதில் சொல்றேன்னு சொன்னேன், சரின்னு சொன்னாங்க. (உரையாடலையே  சொல்றேன் அதான் flow கரெக்டா வரும்)

நான் : " லாங் டெர்ம் பிளான்லாம் இல்ல, ஷார்ட் டெர்ம் பிளான் ஓகே"
தொல்லைபேசி: "ஷார்ட் டெர்ம்னா எப்படி எதிர்பாக்குறீங்க?
நான்: (மனசுக்குள் யோவ் ரெண்டு கேள்வி தானே கேக்க போறனு சொன்ன, இது என்ன மூணாவது கேள்வி)
ஒரு 1 வருஷம், இல்ல ரெண்டு வருஷம்னாலும் ஓகே
தொல்லைபேசி: ஏங்க அது தான் லாங் டெர்ம்ங்க
நான் : அவ்வவ் அப்படியா ?? ஹி ஹி .. அப்போ ஷார்ட் டெர்ம்னா என்னங்க??
தொல்லைபேசி: மூணு மாசம் இல்லனா ஆறு மாசம்
நான்: (மனசுக்குள் : அட கடவுளே இந்த கருமம் தெரியாம போச்சே, லாங்  டெர்ம்னு சொல்லி இருக்கனுமோ?? )
ஆ அப்படி.. ம்ம்ம் சரி அதையே போட்டுகோங்க..
தொல்லைபேசி: சரி சரி, முதல் கேள்விக்கு பதில் சொல்லுங்க.
நான்: முதல் கேள்வியா அது என்னங்க??
தொல்லைபேசி: அதாங்க career Aspiration
( என்ன கருமமோ !! ஸ்பெல்லிங் கூட தெரியல )
நான்: (மனசுக்குள்: மறுபடியும் இந்த கேள்விக்கு வந்துட்டாங்களே)
எனக்கு ஒரு ரெண்டு நிமிஷம் டைம் குடுங்க யோசிச்சு சொல்றேன்
தொல்லைபேசி: அதெல்லாம் முடியாதுங்க இப்போவே ப்பில் பண்ணனும் உடனே சொல்லுங்க
நான்:
சரி ஒரு 1 நிமிஷமவாது டைம் குடுங்க.
தொல்லைபேசி: சரி சரி நான் லைன்ல இருக்கேன் சொல்லுங்க
நான்: (என்ன வில்லத்தனம்). அதாவதுங்க நான் சொந்தமா...
தொல்லைபேசி: ஏங்க அதெல்லாம் இல்ல, organisation குள்ள சொல்லுங்க
நான்: அவ்வ்வ்வ்

சரி இனி தான் விஷயமே, எனக்கு சத்தியமா பதிலே தெரியல, mute  போட்டுட்டு பக்கத்துல இருந்த நண்பன்கிட்ட கிட்ட கேட்டேன்

நான் : நண்பா career Aspiration னா என்ன ? அப்படி ஒன்னு இருக்க இல்லையா? அது இருக்கறதுக்கான அறிகுறி என்ன?

பாவம் பயபக்கி என்னை போலவே இருக்கு... அவனுக்கும் தெரியல என்னென்னமோ உளறுறான்...

ஹ்ம்ம் அப்பறம் என்ன பண்றது நண்பன் உளறுனதையே நானும் உளறி வச்சேன்...

நினைவுகள் - 2

எங்க டீம் தல வீட்டு க்ரஹப்ரவேஷதுக்கு கிப்ட் வாங்கிட்டு பர்ஸ பார்த்தப்ப ஆனந்த அதிர்ச்சி.. :D :D என்றைக்கும் பத்து பைசா இல்லாத பர்ஸ்ல இருந்த பத்து ரூபாய், பத்துலட்ச மகழ்ச்சிய குடுத்துச்சு, பல நாள் ஆசை , என் மசால் பூரி ஆசை மனசை கிளரிவிட்டுடுச்சு. இருக்காதா பின்னே, ஆசையாய் மசால் பூரி கடையை நோக்கி சென்று, 10 பைசா பர்ஸ்ல இல்லாம திரும்பிய நாட்கள் உண்டு.. அதனால என்றும் மெதுவாக சோம்பி நடக்கும் கால்கள், பர பரவென ஓட துவங்கியது. ஆனால்... பூட்டிய கடை முகத்தில் அறைந்தது.. :'( :'(, அதுவரை பரபரத்த கால்கள் துவண்டு நடுங்கியது... கெஞ்சி அடம் பிடித்து பலூன் வாங்க காசு வாங்கி தெரு நோக்கி ஓடி வந்து, பலூன்காரன் தலை மறைந்த வீதியை கண்டு மனம் வெம்பி அழ தயாராகும் குழந்தையின் அழுகை தொண்டை குழியில் முட்டிக்கொண்டு நின்றது...
அந்த பத்து ரூபாயை செலவழித்தால் மட்டும் மனம் நிம்மதி அடையும் என புத்தி சொன்னது ( புத்தியும் மனசும் வேற வேறயானு கேட்டுடாதீங்க சத்தியமா எனக்கு பதில் தெரியாது). ஒரு வழியா முடிவு பண்ணி தெரு முனை பிள்ளையார் கோவில் கிட்ட இருந்த பெட்டி கடைல முறுக்கும் கடலை உருண்டையும் வாங்கி சாப்பிட்டேன் (முறுக்கு இன்னும் நாலணாவிற்கு விக்குதுங்க !!!). அப்பறம் என்ன ஹாப்பி எண்டிங் தான், ஜாலியா முறுக்கு சாப்ட்டுகிட்டே வீடு வந்து சேர்ந்தாச்சு...moral : ஆசைப்பட்டது கிடைக்கலனா, கிடைச்சத ஆசை பட்டு ஏத்துக்க வேண்டியது தான் :P :P

நினைவுகள் - 1

நேற்று இரவு அம்மாவை அழைத்து வர மாம்பலம் ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தேன்.ரயில் வர தாமதமானதால், அப்படியே ரெங்கநாதன் தெருவில் இறங்கி நடக்க தொடங்கினேன், இரவு ஒன்பதரை மணிக்கு கூட மிச்ச சொச்ச கூட்டம் கடைகளை மொய்த்து கொண்டிருந்தது. எதையும் வாங்கும் எண்ணமில்லை என்று சொல்லவதை விட வாங்க காசில்லை என்று சொல்லவே விரும்புகிறேன். அப்படியே காலாற நடந்தபோது ஒரு தாய் தன் 12 வயதிருக்கும் மகனை அதட்டி கொண்டே பின்னே சென்றார்,
"டேய் வாட்ச் தானே வாடா வாங்கித்தரேன் "
"வேண்டாம் போ"
"அட வா தம்பி அதான் வாங்கி தரேன்னு சொல்றேன்ல"
"வேண்டாம்னு சொல்றேன்ல விடு, முதல்ல கேட்டப்ப வாங்கி தரல்லல அப்பறம் என்ன ? வேண்டாம் போ "
உரையாடல் காதுகளுக்கு எட்டாத தூரம் சென்றுவிட்டிருந்தது ... மனம் பின்னோக்கி நினைவலைகளுக்குள் சென்றது... இதே போல் என் அம்மா என் பின்னே பாசத்தோடு அதட்டிக்கொண்டு வந்தார்..

ஹ்ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம்.. இப்பொழுதெல்லாம் எதையும் கேட்டு வாங்க வேண்டிய அவசியம் இருபதில்லை.. விரும்பியதை விரும்பாததயோ வாங்கி கொள்கிறேன், அத்யாவசியமா என்று கூட நினப்பதில்லை... புதிதாக எதாவது வாங்கினால், கூட அம்மாவே இது புதியதா என்று கேட்கும் வரை சொல்லவதுமில்லை, அல்லது சொல்ல கூட நேரமில்லாத நிலை.

வரட்டு பிடிவாதத்துடன் முன்னே முறுக்கி கொண்டு சென்ற என்னை அதட்டி கூப்பிட்ட அம்மாவின் குரலை ரயில் ஓசை கலைத்துச் சென்றது

அவளுடைய அவன்

அவளுடைய அவன்

அவளுக்கு அவன் மீது காதல்…அது என்றுமே தீராத காதல். ஒவ்வொரு நாளும் அவனை புதிது புதிதாக பார்க்கிறாள், பார்க்கும் நொடி எல்லாம் அவள்ளுள் புதிதாகவே காதல் பூக்கிறது.

அவனின் சிவந்த நிறத்திலும் ரோஜா கன்னங்களிலும் அவள் மயங்கி இருக்கிறாள். அவனின் சிவந்த தேகம் கண்டு அவள் கண்கள் நாணிச் சிவக்கும்.

அவன் இல்லையென்றால் அவளுக்கு ஒரு வேலையும் ஓடாது என்பதை அவள் அறிவாள், அதனாலேயே அவன் எப்போதும் இல்லாது போகாமல் பார்த்துக்கொள்கிறாள்.

அவனில்லாது போன பல நாட்கள் அவனுக்காக காத்திருக்கிறாள்.

அவன் அவளை அழ வைத்திருக்கிறான், சில நாட்கள் குறைவாக; சில நாட்கள் மிகுதியாக. அவளின் கண்ணீரும் அவனை நேசிக்கின்றது. அவன் மேல் அளவுகடந்து கொண்டுள்ள காதல் அவள் கண்ணீரையும் சில நொடிகளில் கரைத்து விடுகின்றது…

அவனை யாரவது தவறாக கூறினால், தாங்கமாட்டாமல் அவ்விடம் விட்டு நகர்ந்து விடுவாள்.

அவனிடம் அவள் நிறைய பாடங்களை கற்றிருக்கிறாள்; அதில், “தேட தேட ஒன்றும் இல்லாமல் முடியும் வாழ்கை பாடம்” அவளுக்கு மிகவும் பிடித்தமானது.

அவனை தவிர்க்க அவளுக்கு மனமே வராது..மற்றவர்கள் தவிர்த்தாலே அவள் தவிப்பாள்.

அவன் -

எத்தனை காயங்கள் அவளால் பெற்றாலும், என்றும் அவள் கையில் ஆசையாய் அடங்குவான்…. அவளின் “வெங்காயம்”

பி.கு Specially dedicated to அம்மா. அவங்களுக்கு வெங்காயம் ரொம்ப பிடிக்கும். :P

Sunday, 15 January 2012

அவமான படுத்துரதுன்னா மொத ஆளா வந்துடுவாங்க


சம்பவம் 1
இடம் உணவு விடுதி
நானும் நண்பனும்
நான் : எதுக்கு ஸ்பூன்
நண்பன் : இதென்ன கேள்வி சாப்பாடு சாப்பிட தான்
நான் : :@ :@ :@
நான் : கை இருக்குல்ல
நண்பன் : ஆமாம் இருக்கு, வேணும்னா பாரேன் :D :D
நான் :  உனக்கென்ன கைல குஷ்டமா ஏன் ஸ்பூன் ல சாப்புடுற
நண்பன் : கைல குஷ்டம் இருந்தா ஸ்பூன் பிடிக்க முடியுமா என்ன 
நான் : எனக்கு தெரியாது
நண்பன் : என் கை என் ஸ்பூன் என் சாப்பாடு உனக்கென்ன வலிக்குது, உன் சாப்பாட சாப்பிட்ட மாதிரி அழுவுற
நான் :  ரைட் விடு  :@ :@
சம்பவம் 2
இடம் ரயில்
நானும் தங்கையும்
(பக்கத்தில் இருந்த ஒரு குடும்பம் ரயிலில் ஏறியதில் இருந்து எதாவது சாப்பிட்டு கொண்டே இருந்தனர் )
நான் : ஏய் இங்க பக்கத்துல்ல இருக்கற கும்பல பாரேன் எதாவது தின்னுக்கிட்டே இருக்காங்க எரிச்சலா இருக்கு
தங்கை :  ஏன் எரும உனக்கு வேணுமா  :D :D
நான் :  தூ ஓடிரு :@
தங்கை : தேங்க்ஸ் டி அப்போ அம்மாகிட்ட சொல்லிடு :D :D
நான் : ரைட் விடு :@ :@
சம்பவம் 3
இடம் ஆபீஸ்
நான் தோழி(அடிக்கடி தின்பண்டம் தரும் தோழி ) மற்றும் பலர்
தோழி : (மெயில்) என் இடத்திற்கு வரவும்
நான் : (வேகமாக ஓடினேன், கூட வந்த இன்னொரு தோழியை இடித்து தள்ளி விட்டு ஓடினேன்) :D :D
நான் : குடுங்க குடுங்க
தோழி : அட சே எப்போ கூப்ட்டாலும் திங்க தான் கூப்பிடுவாங்களா
(சுற்றி எல்லாரும் சிரிக்க ஆரம்பித்தனர் )
நான் : ரைட் விடுங்க :@ :@
சம்பவம் 4
இடம் லிப்ட்
நான் நண்பன் மற்றும் பலர்
நான் : ஏய் ஜீரோ பிரஸ் பண்ணு கீழ போகணும்
நண்பன் : அதுக்கு எதுக்கு ஜீரோ வ பிரஸ் பண்ணனும் :D :D
நான் : ஏன் வேற என்ன பண்ணனும் ???!!! (வினை எங்கயும் இல்ல என் நாக்குல தான் இருக்கு)
நண்பன் : நீ ஒரு தடவ குதி போதும் லிப்ட் தானா கீழ போய்டும் :D :D :D
நான் : :@ :@ :@
இன்னொரு நண்பன் : பாத்து பா பூமிஎ பொளந்துட்டு கீழ போயிட போகுது :D :D
நான் :  :@
நான் : நண்பா நான் என்ன குண்டாவா இருக்கேன் :'(
நண்பன் : இல்லையே
நான் : அப்பறம் :(
நண்பன் : ரொம்ப குண்டா இருக்க :D :D :D
நான் : ரைட் விடு :@ :@
பிளான் பண்ணி அசிங்கபடுத்துவாங்களோ  :@

எரிச்சலா வருதுங்க


சில விஷயத்துல நமக்கு வர எரிச்சல கண்டிப்பா அடக்கவே முடியாது 
1 ).  சில நேரத்துல ரொம்ப முக்கியமா எதாவது தேடிகிட்டு இருப்போம்… ஆனா அது மட்டும் கிடைக்கவே கிடைக்காது அப்போ வரும் பாருங்க எரிச்சல்…  அதுவும் முக்கியமா காலைல அவசர அவசரமா கெளம்பும்போது தான் ஊக்கு கண்டிப்பா கண்ல சிக்காது… ஆனா வேற எதாவது பொருள் தேடும்போது டஜன் டஜனா கிடைக்கும் அப்போ வரும் பாருங்க எரிச்சல்  :@ :@ :@
2 ). ஒரு காலத்துல 570 பஸ்க்கு  வெயிட் பண்ணும்போது, ஒரு 570  பஸ் கூட வராது… வரிசையா 19b  தான் வரும்.. ஆனா இப்போ 19b க்கு வெயிட் பண்ணினா வரிசையா 570  தான் வரும்.. அப்போ வரும் பாருங்க எரிச்சல் :@ :@ :@
3 ). 8 மணி பஸ் க்கு ஏழு ஐம்பதுக்கே போய் நின்னா கண்டிப்பா பஸ் எட்டேகாலுக்கு தான் வரும்.. சரி பஸ் லேட்டா தானே வருதுன்னு எட்டு அஞ்சுக்கு போனா பஸ் ஏழு ஐம்பத்தியொன்பதுக்கே போய்டும்.. ஏன் இப்படி.. இல்ல ஏன் இப்படி  :@ :@ :@
4). ரெண்டு வாரம் துணி தொவைக்காம சேத்து வச்சி மொத்தமா ஞாயத்துகிழம உக்காந்து மாங்கு மாங்கு னு தொவைச்சா… மழை போட்டி போட்டுக்கிட்டு வெளுதுக்கட்டும்போது எரிச்சல் வரும் பாருங்க  பிளான் பண்ணி தான் உசுர வாங்குமோ இந்த மழை  :@ :@ :@
 5 ). புது டிரஸ் போட்டுக்கிட்டு சீன் போடலாம் னு ப்ளான் பண்ணி போட்டா.. என்னைக்கும் எந்த டிரஸ்லயும் மாட்டாத பாத்ரூம் கதவு ஆணி கண்டிப்பா புது டிரஸ்ச மாட்டி இழுக்கும்… ஆணிய !@#$%^& வேணாம்  :@ :@ :@
 6 ).  காலைல 9  ஸ்டேடஸ் கால்ல முக்கியமா எதாவது சொல்லவேண்டியது இருக்கும் ஆனா பஸ் கண்டிப்பா ஒன்பதரைக்கு தான் போகும்.. கடவுளே இன்னைக்கு ஸ்டேடஸ் கால எப்படியாவது டபாய்ச்சிடனும்னு நினைக்கிற நாள்ல தான் பஸ் 9 மணிக்கே ஆபிஸ் போய்டும்.. அப்போ வரும் பாருங்க எரிச்சல் :@ :@ :@
7 ). கைல காசு இருக்கும்போதெல்லாம் இந்த மசாலா பூரி சாப்பிட ஆசை வராதுங்க.. ஆனா என்னைக்காவது ஆசையா மசாலா பூரி சாப்பிடலாம்னு போய் நின்னு பர்ஸ தொறந்தா 2 ரூபா 50  பைசாக்கு மேல தேராது.. அப்போ வரும் பாருங்க எரிச்சல்  :@ :@ :@
8 ). எல்லா சனி கிழமையும் ஆபிஸ் போயிட்டு எதாவது ஒரு சனி கிழம எங்கயும் ஊரு சுத்தாம ஜாலியா ரூம்ல ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைக்கிற அன்னைக்கு கண்டிப்பா கரண்ட் முழு நாளும் இருக்காதுங்க.. சாயங்காலம் ஆறு மணிக்கு தான் கண்டிப்பா கரண்ட் வரும்…அப்போ வரும் பாருங்க எரிச்சல்  :@ :@ :@
ஹ்ம்ம் என்ன பண்றது எல்லாம் நேரம்… விதி வலியது…    :@ :@ :@

வெட்டியா இருக்கறது ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல


கஷ்டப்பட்டு அடிச்சு பிடிச்சி ஒரு வழியா ரிலீஸ் வாங்கிட்டேன்….  :D :D :D
அப்பாடா.. அப்படின்னு நிம்மதியா வீட்ல இருந்திருக்க வேண்டியது தானே (மனசாட்சி)
அட மனசாட்சி ஆயிரம் சொல்லுங்க மனுஷனுக்கு நேர்மை நாணயம் முக்கியமுங்க   (க்கும் இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல )
சரி உண்மைய சொல்லனும்னா வீட்ல தனியா இருக்க போர் அடிக்கும், ஏசி இருக்காது (ஹி ஹி ), வீநெட் இருக்காது, நெட் காசு கொடுத்து உபயோகிக்கணும்.. இதையெல்லாம் யோசிச்சு ஆபீஸ் வந்தேனுங்க (வந்ததுக்கு தான் வச்சாங்களே ஆப்பு )
எங்க டீம்ல (ஓ டீம் தான் இல்லையோ) சீனியர் ஒருத்தர்: என்ன கார்கி ஒரே ஜாலியா….
நான் : (மனசுக்குள்ள “இப்போ தானேயா வந்தேன் அதுக்குள்ளயா)
ஹி ஹி அப்படிலாம் ஒன்னும் இல்லைங்க.. யார்கிட்ட போய் ரிப்போர்ட் பண்ணணும்னு தெரியல போய் பாக்கணும் ( இப்படி சொல்லி தான் தப்பிச்சுக்கணும்)
சீனியர்: ஓகே ஓகே  (நக்கல் சிரிப்பு)
இந்த நண்பர்கள் இருக்காங்களே.. ஹ்ம்ம் அவங்க தான் நம்மள வாரி விடுறதுல மொத ஆளா வந்து நிப்பாங்க
நண்பன் : நண்பா வா வா உன்ன தான் எதிர் பார்த்துக்கிட்டு இருந்தேன்
நான் : (மனசுக்குள்ள ஆகா ஆரம்பமே அமர்களமா இருக்கே)
என்ன நண்பா
நண்பன் : ஹி ஹி ஹி என்ன வெட்டியா
நான் : நான் தான் அதுக்கு சந்தோஷ படனும் நீ ஏன் சிரிக்கிற
நண்பன் : சை உன்ன மாதிரி வெட்டி பயலுக்கெல்லாம் ஏன் சம்பளம் குடுக்குறாங்களோ
நான் :இதுக்கு தான் எதிர் பார்த்துக்கிட்டு இருந்தியா :@ :@ :@ ஓடிரு
சரி நாம வெட்டியா இருக்குற மாதிரி காட்டிக்க கூடாதேனு சும்மா vb ஸ்கிரிப்ட் அது இதுன்னு ப்ரௌஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன்  ( இது தான் நான் பண்ணின மொத தப்பு   )
நண்பி : ஒரு நாள்ல அப்படியே எல்லாம் படிச்சு கிழிச்சு அறிவாளி ஆகுற மாதிரி தான்
நான்: உனக்கு பொறாமை நான் எங்க அறிவாளி ஆய்டுவேனோனு
நண்பி: வெட்டியா வாய் பேச்சு பேசி என் நேரத்தை வீணாக்காத
நான்: எனக்கும் ஒரு காலம் வரும் டீ
நண்பி: வந்தா பாத்துக்கலாம்
நான்:  ஓடிரு
எவ்வளோ நேரம் தான் நானும் படிக்கிற மாதிரியே நடிக்கிறது…
அங்க இங்க போய் சுத்தி எல்லார்கிட்டயும் அசிங்க பட்டதுதான் மிச்சம்… இது போதாதுன்னு “இன்னும் வேற ப்ராஜெக்ட் allocate ஆகலையா”னு கேட்டே சாவடிபாங்க…
இதுல யாரடா எப்ப பயமுறுத்தலாம் னு ஒரு கூட்டம் சுத்திக்கிட்டு இருக்கும் பாருங்க “இயர்-எண்டு அப்பரைசல், recession .. அப்படி இப்படி னு பீதி கெளப்பிக்கிட்டு திரிவாங்க… ( ஏன்டா ஒரு வாரம் தானே வெட்டியா இருக்கேன்.. அதுகூட உங்களுக்கு பொறுக்கலியா   )
கடவுளா பாத்து discussion னு ஒரு ப்ரோஜெக்ட்க்கு அனுப்பி வைச்சாரு (அது கடவுள் இல்ல சாத்தன் னு அப்பறம் தான் தெரிஞ்சுது )
கொடும கொடுமனு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடும டிங்கு டிங்குனு ஆடுச்சாம்…. அப்படி ஆய்டுச்சுங்க என் கதை
discussion ங்கற பேர்ல கரெக்டா எனக்கு தெரியாததா கேட்டாங்க பாருங்க ( மனசாட்சி - ஆமாம் அப்படியே தெரிஞ்சிட்டா மட்டும் )
அவங்க கேட்டது கூட பரவா இல்லங்க… ஒரு வருஷமா இந்த வேலையத்தான் பாத்துகிட்டு இருந்தீங்களானு கேட்டுட்டாங்க.. அத தான் தாங்க முடியல ( சே ஒரு வாரம் prepare பண்ணினது வேஸ்ட்ஆ போச்சே)  :’(  :’(
மறுபடியும் என்ன..  ப்ரொவ்சிங்,பிரேக், கதை பேசுறது… ஹ்ம்ம் வெட்டி தான்
ஆனா ஒன்னு தெரிஞ்சிகோங்க… வெட்டியா இருக்குறது ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல.. அதுக்கும் ஒரு திறமை வேணும்(எல்லாரையும் சமாளிக்கணும் ல), பொறுமை வேணும் ( எதிரிங்க ஜாஸ்தி பாஸ்…)  
அதனால வெட்டியா இருக்குறவங்கள ஏளனமா பேசாதிங்க, அசிங்க படுத்தாதிங்க பா…  :)  
மனசாட்சி - சரி சரி கவலைபடாத “இதுவும் கடந்து போகும்”
நான் - ஓடிரு

அப்பா……


உன் மீது கால் போட்டு
நான் தூங்காத நாளில்லை ..
உன் கால்கள் மீது
என் கால்கள் வைத்து
நான் நடை போடாத நாளில்லை ..
உன் கைலியில் அமர்ந்து
நான் ஊஞ்சலாடாத நாளில்லை..
ஒவ்வொரு முறை நீ
ஊரில் இருந்து திரும்பும்போதும்
நான் ஓடி வந்து அணைக்காத நாளில்லை ..
முடி வெட்ட விருப்பம் இல்லாவிட்டாலும்
நீ அழைத்து நான் வராத நாளில்லை ..
எத்தனை முறை பென்சிலை தொலைத்தாலும்
எதுவும் கூறாமல்
நீ வாங்கி தராத நாளில்லை …
அம்மா ஊருக்கு செல்லும்போதெல்லாம்
அக்கறையாய்
நீ கவனிக்காத நாளில்லை …
இப்பொழுதெல்லாம் உன் நினைவு நாளில்
மட்டுமே இவை நினைவுக்கு வருகின்றது அப்பா….

Monday, 9 January 2012

மிச்சம்



பாதி படித்து வைத்த
புத்தகத்தின்
மிச்ச வார்த்தைகள்
கை கோர்த்து விளையாடுகின்றன
என் கனவின் தாழ்வாரத்தில்.......

வரி வடிவமின்றி
எழுத்துக்களாகவும்
ஓசைகளாகவும்
ரீங்காரமிடுகின்றன
என் கனவின் காதுகளில்...

சில கோபத்துடனும்
சில கெஞ்சலுடனும்
முழுதாக ஆக்கிரமிக்கின்றன
என் கனவின் தூரத்தை....

நான் திடுக்கிட்டு
விழிக்கும் வரை
அவை
மெதுவாக புசிக்கின்றன
என் கனவின் ஆழத்தை.....