உன் மீது கால் போட்டு
நான் தூங்காத நாளில்லை ..
நான் தூங்காத நாளில்லை ..
உன் கால்கள் மீது
என் கால்கள் வைத்து
நான் நடை போடாத நாளில்லை ..
என் கால்கள் வைத்து
நான் நடை போடாத நாளில்லை ..
உன் கைலியில் அமர்ந்து
நான் ஊஞ்சலாடாத நாளில்லை..
நான் ஊஞ்சலாடாத நாளில்லை..
ஒவ்வொரு முறை நீ
ஊரில் இருந்து திரும்பும்போதும்
நான் ஓடி வந்து அணைக்காத நாளில்லை ..
ஊரில் இருந்து திரும்பும்போதும்
நான் ஓடி வந்து அணைக்காத நாளில்லை ..
முடி வெட்ட விருப்பம் இல்லாவிட்டாலும்
நீ அழைத்து நான் வராத நாளில்லை ..
நீ அழைத்து நான் வராத நாளில்லை ..
எத்தனை முறை பென்சிலை தொலைத்தாலும்
எதுவும் கூறாமல்
நீ வாங்கி தராத நாளில்லை …
எதுவும் கூறாமல்
நீ வாங்கி தராத நாளில்லை …
அம்மா ஊருக்கு செல்லும்போதெல்லாம்
அக்கறையாய்
நீ கவனிக்காத நாளில்லை …
அக்கறையாய்
நீ கவனிக்காத நாளில்லை …
இப்பொழுதெல்லாம் உன் நினைவு நாளில்
மட்டுமே இவை நினைவுக்கு வருகின்றது அப்பா….
மட்டுமே இவை நினைவுக்கு வருகின்றது அப்பா….
No comments:
Post a Comment