பாதி படித்து வைத்த
புத்தகத்தின்
மிச்ச வார்த்தைகள்
கை கோர்த்து விளையாடுகின்றன
என் கனவின் தாழ்வாரத்தில்.......
வரி வடிவமின்றி
எழுத்துக்களாகவும்
ஓசைகளாகவும்
ரீங்காரமிடுகின்றன
என் கனவின் காதுகளில்...
சில கோபத்துடனும்
சில கெஞ்சலுடனும்
முழுதாக ஆக்கிரமிக்கின்றன
என் கனவின் தூரத்தை....
நான் திடுக்கிட்டு
விழிக்கும் வரை
அவை
மெதுவாக புசிக்கின்றன
என் கனவின் ஆழத்தை.....
No comments:
Post a Comment