Sunday, 29 January 2012

நினைவுகள் - 2

எங்க டீம் தல வீட்டு க்ரஹப்ரவேஷதுக்கு கிப்ட் வாங்கிட்டு பர்ஸ பார்த்தப்ப ஆனந்த அதிர்ச்சி.. :D :D என்றைக்கும் பத்து பைசா இல்லாத பர்ஸ்ல இருந்த பத்து ரூபாய், பத்துலட்ச மகழ்ச்சிய குடுத்துச்சு, பல நாள் ஆசை , என் மசால் பூரி ஆசை மனசை கிளரிவிட்டுடுச்சு. இருக்காதா பின்னே, ஆசையாய் மசால் பூரி கடையை நோக்கி சென்று, 10 பைசா பர்ஸ்ல இல்லாம திரும்பிய நாட்கள் உண்டு.. அதனால என்றும் மெதுவாக சோம்பி நடக்கும் கால்கள், பர பரவென ஓட துவங்கியது. ஆனால்... பூட்டிய கடை முகத்தில் அறைந்தது.. :'( :'(, அதுவரை பரபரத்த கால்கள் துவண்டு நடுங்கியது... கெஞ்சி அடம் பிடித்து பலூன் வாங்க காசு வாங்கி தெரு நோக்கி ஓடி வந்து, பலூன்காரன் தலை மறைந்த வீதியை கண்டு மனம் வெம்பி அழ தயாராகும் குழந்தையின் அழுகை தொண்டை குழியில் முட்டிக்கொண்டு நின்றது...
அந்த பத்து ரூபாயை செலவழித்தால் மட்டும் மனம் நிம்மதி அடையும் என புத்தி சொன்னது ( புத்தியும் மனசும் வேற வேறயானு கேட்டுடாதீங்க சத்தியமா எனக்கு பதில் தெரியாது). ஒரு வழியா முடிவு பண்ணி தெரு முனை பிள்ளையார் கோவில் கிட்ட இருந்த பெட்டி கடைல முறுக்கும் கடலை உருண்டையும் வாங்கி சாப்பிட்டேன் (முறுக்கு இன்னும் நாலணாவிற்கு விக்குதுங்க !!!). அப்பறம் என்ன ஹாப்பி எண்டிங் தான், ஜாலியா முறுக்கு சாப்ட்டுகிட்டே வீடு வந்து சேர்ந்தாச்சு...moral : ஆசைப்பட்டது கிடைக்கலனா, கிடைச்சத ஆசை பட்டு ஏத்துக்க வேண்டியது தான் :P :P

No comments:

Post a Comment