இது என் முதல் முயற்சி, என்னுடைய இந்த முயற்சிக்கு ஊக்கம் அளித்த என் நண்பர்களுக்கு நன்றி. எனக்கு தெரிந்த தமிழில் இந்த கதையை சொல்கிறேன்;தமிழ் ஆர்வலர்கள், தமிழ் நேசிப்பாளர்கள் இதை மன்னிக்க வேண்டும். பிழை இருப்பின் தயவு செய்து கூறுங்கள் கண்டிப்பாக திருத்திக்கொள்கிறேன் .
இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே.யாருடைய மனமும் புண்படும் நோக்கில் இதை எழுதவில்லை.
காலைல இருந்து பிங் பண்ணிக்கிட்டு இருக்கேன் ஏன் ரிப்ளை பண்ணவே மாட்டேன்குறான். கவலை மனதை பிசைய கணிணித்திரையில் தெரிந்த நேரத்தை வெறித்தபடி நகத்தை கடித்துக்கொண்டிருந்தாள்.
ஒரு நிமிட காத்திருப்பிற்கு பின், “எவ்வளோ நேரம் தான் வெயிட் பண்ணறது” சலித்துக்கொண்டாள் .நண்பர்களின் அழைப்பு வரவே கணினியை லாக் செய்துவிட்டு கேபினை விட்டு வெளியே வந்தாள்.
அக்செசில் சொருகிய கார்டில் “அதுல்யா சங்கரன்” தேய தொடங்கி இருந்தது.
“ஓய் எவ்ளோ நேரம் வெயிட் பண்ணறது?” பொய் கோபத்துடன் தீபக் கேட்டான்
பதில் பேசாமல் மௌனமாக, போகலாம் என்ற சாக்கில் நடந்தாள் அதுல்யா.
“என்னாச்சு லூசு எதாவது பிரச்சனையா?? ஏன் அமைதியா இருக்க? “ஸ்ரீனி அக்கறையுடன் கேட்டான்.
“ஒன்னும் இல்ல லேசா தலை வலி”
“டேய் அவங்க ‘உயரதிகாரி’ எதாவது காய்ச்சி இருப்பாங்க, அதான் இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி வருது” என்று சொல்லி திவ்யா சிரித்தாள்
“சத்தியமா ஒன்னும் இல்ல பேசாம வாங்க”
சாப்பிட்டு முடிக்கும் வரை நண்பர்களின் கலாட்டக்கள் எதிலும் கலந்து கொள்ளாமல், சாதத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். உணவு உள்ளே செல்லாமல் தொண்டையை அடைத்தது.
இன்னும் சிறிது நேரம் அங்கு இருந்தால் திரைட்டு இருக்கும் கண்ணீர் வெளியே வந்துவிடும் என்பதை அறிந்து, வேலை இருக்கு என்று கூறி கிளம்பி விட்டாள்.
“என்னடா ஆச்சு இதுக்கு? காலைல நல்லாதானே இருந்தா” இது தியாகு.
“தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்” நண்பர்கள் கோரசாக சொல்லி சிரித்தாலும் அனைவர் மனதிலும் அவளுக்கு என்னாச்சு என்ற எண்ணமே ஓடி கொண்டிருந்தது.
கேபினுக்குள் நுழைந்த அதுல்யா கணினியை அன்லாக் செய்தவாறே பொத்தென்று இருக்கையில் அமர்ந்தாள்.திரையில் “ஹரிஷ் ஸ்ரீதர்” சாட் விண்டோ ஒளிர்ந்தது..
ச்சு கொட்டி சலிப்புடன் அதை மூடிவிட்டு கம்யுனிகேட்டரில் ”ஆதித்யாஅரவிந்தனை” தேடி சொடுக்கினாள், ஆப்லைன் முகத்தில் அறைந்த நொடி அதுல்யாவிற்கு தலை விண் விண்ணென்று தெறிக்க துவங்கியது…
அதே சமயம், அந்த அலுவலகத்தின் இரண்டாவது மாடியில், குப்பைதொட்டியை கவிழ்த்து அதன் மேல் கால்களை நீட்டி, இரண்டு கைகளையும் தலைக்கு பின் கோர்த்து கணிணியை வெறித்துக்கொண்டிருந்தான் ஆதி என்கிற ஆதித்யா.. காதுகளின் உள்ளே “செந்தாழம் பூவின்” ஒலித்து கொண்டிருந்தது.
வீநெட் அலறியது “டேய் ஆதி என்னடா ஆப்லைன்ல இருக்க?”
“ஆமாம் டா என்ன பிரச்சனைனே தெரியல மச்சி காலைல இருந்தே யாருக்கும் பிங் பண்ணவே முடியல அதான் கடுப்பாகி சைன்அவுட் பண்ணிட்டேன்”
“நான் கூட ட்ரீட்க்கு பயந்து ஆப்லைன்ல போய்டியோனு பயந்துட்டேன் ஹி ஹி ஹி ”
“அடச்சே அதெல்லாம் இல்ல மச்சி இன்னைக்கு நைட் கண்டிப்பா பார்ட்டி உண்டு”
தலைவலி தாங்க முடியாததால் ஆறு மணிக்கே அதுல்யா கிளம்பிவிட்டாள். கிளம்பும் முன் மறுமுறை கம்யுனிகேட்டரில் ஆதியை தேடினாள், அதே நிலையை தான் காட்டியது.
பேருந்துக்கு அவசரமாக ஓடி ஏறி பார்த்தால் பேருந்து நிரம்பி வழிந்தது முன் சீட் மட்டுமே காலியாக இருக்க அதிலேயே அமர்ந்தாள்.
மதியம் சாப்பிடாததால் பசி தாங்க இயலாமல் கைப்பையில் வைத்திருந்த ஓட்ஸ் பிஸ்கட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். பிஸ்கட்டில் இருந்த உப்புடன் ஆதி மேல் வந்த எரிச்சல் கலந்து கரிக்க தொடங்கியது.
தண்ணீர் குடித்தால் தேவலாம் போல இருந்தது, கைப்பையில் காலி பாட்டில் தான் இருந்தது. சரி பின்னாடி திரும்பி தண்ணீர் கேக்கலாம் என்று நேர் எதிர் பின்பக்க சீட்டை நோக்கி திரும்பினாள்….
அங்கே ஆதி ஒரு பெண்ணுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தான்…
நேரம் வரும், காத்திருப்போம்….

No comments:
Post a Comment