Saturday, 30 June 2012

நினைவுகள் - 7


இந்த மாற்றம் தேவை தானா என்று தோன்றும் அளவு நெருக்கம் இதனுடன். ஆயிற்று ஒன்றரை வருடங்கள் சைதாப்பேட்டையில். வாழ கற்றுக் கொடுத்த இடம்! நிறைய சோகம்.. நிறைய சந்தோஷம்.. நிறைய பாடங்கள்...நிறைய தனிமை..நிறைய அழுகை...பிரிவு , வலி, சண்டைகள்.. இன்னும் நிறைய நிறைய... நிறைய நிறைய...நிறைய நிறைய. வந்த புதிதில்  ”சைதாப்பேட்டை” - பெயரிலேயே ஒரு பயம் காட்டிய இடம்;“கலீஜான இடம், ரவுடிகள் ஏரியா, கொசுக் கடி, தண்ணீர் பிரச்சனை...” இன்னும் என்னனவோ என்று எண்ணி தான் வந்தேன். ஆனால் நான் நினைத்ததுக்கு நேர் மாறாய் அமைந்தது இந்த இடம் எனக்கு. சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை அளித்த இடம். இங்கு நான் சுற்றாத இடம் இல்லை! ஒவ்வொரு மூலையையும் அத்துப்படி. பேருந்து ஏற நெடுந்தொலைவு தினமும் நடந்து செல்லும் பாதை , வழி நெடுக கன்னத்தில் போட்டுக் கொள்ளும் கோவில்கள், டைலர் அண்ணா, மளிகை கடை, மாவு கடை ,சமையல் அக்கா, மசால் பூரி கடை, ரயில்வே ஸ்டேஷன், ஆட்டோ அண்ணன், எதிர்பார்த்து வரும் எல்லா நேரமும் ஏமாற்றும் ஏடிம், வாட்ச்மான் அண்ணா, வேப்ப மர நிழல், பட்டம் விடும் சிறு நண்பர்கள்.......இந்த செடிகள், இந்த மாடி, இந்த வாசல், இந்த வீடு !!!!  ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றம்.!! இடம் மாறுதல் எனக்குள் பெரிய மாற்றத்தை எப்பொழுதும் ஏற்படுத்தியது இல்லை! நான்கு வருடங்கள் உருண்டு பிறண்ட கல்லூரி விடுதி பிரிவே எனக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் பெரும் பாறாங்கல் பாரம் மனதுள் அழுத்துகிறது, ஒரு நிமிடம் பாக் பண்ணி வைத்திருக்கும் பிரித்தெரிந்துவிட்டு அமைதியாய் உக்கார்ந்து கொள்ளலாம் என தோன்றுகிறது. ஆனால் இந்த மாற்றம் எனக்கு தேவையானது தான்!! இங்கு திரும்பி வருவேனா என்பது நிச்சயமில்லை. ஆனால் வரும்படி நேர்ந்தால் , இதை விட்டு இனியொரு முறை பிரிவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.


#Bye Bye சைதாப்பேட்டை!!!! :’(

No comments:

Post a Comment