Tuesday, 19 June 2012

நினைவுகள் - 4

நேற்று கம்பெனி பேருந்தில் பயணம் செய்தபொழுது, பேருந்தின் கையொப்ப தாளில் தமிழில் பெயரை எழுதி கையொப்பமிட்டேன்.. அது குற்றமா? பேருந்தில் இருந்து இருந்து இறங்கியவுடன், என்னுடன் எப்பொழுதும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் ஒரு தோழி என்கிட்ட கேட்டாங்க, " ஏங்க தமிழ்ல பேர் எழுதி சயின் போட்டு இருந்தீங்க?"
"தமிழ்ல எழுத ஆசையா இருந்துச்சுங்க அதான்", 
"இல்ல எல்லாரும் அதப்பத்தி தான் பேசிகிட்டு இருந்தாங்க "
"ஓ சரி"
"உங்களுக்கு தமிழ்ல எழுத ஆசையா இருந்துச்சுனா வீட்ல போய் எதாவது பேப்பர்ல எழுதி பார்க்க வேண்டியதுதானே" (நக்கலான சிரிப்புடன்)
"ஏங்க நான் என்ன கிளைண்டுக்கு தர போற பிசினஸ் ரிப்போர்ட்லயா தமிழ்ல எழுதினேன் இல்ல ஸ்டேடஸ் ரிப்போர்ட்ல எழுதினேனா? இதுனால எதுவும் ஆகாதுங்க" (பயங்கர கோவத்தோட)
"அட அட என்ன ஒரு தமிழ் பற்று" (அதே நக்கல் சிரிப்பு)
"தமிழ் நம்மளோட மொழிங்க, என்னோட மொழில எழுதுறது எனக்கு ஒன்னும் அசிங்கம் இல்லங்க" (அதே பயங்கர கோவம் )
அமைதியாக சென்றுவிட்டாள் அந்த பெண்.....

ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.. இனி நிறுத்திவிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.. ஆம் இனி பேருந்து கையொப்ப ஏட்டில் கைஎழுத்திடுவதையே!!!

No comments:

Post a Comment