Saturday, 30 June 2012

நினைவுகள் -5



சில பேரு இருக்காங்க பாருங்க இந்த எக்ஸாம் டைம்ல தான் எக்கச்சக்க சக்க சக்க செண்டிமெண்ட் பார்பாங்க. எக்ஸாம் அன்னைக்கு இட்லி சாப்பிட கூடாது, மை போட கூடாது (மை இடுறதுக்கும் எக்ஸாம் எழுதுறதுக்கும் என்ன சம்பந்தம் ?? ), சாப்பிட கூடாது (இதுலலாம் நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்கவே மாட்டேன் ... எக்ஜட்ரா எக்ஜட்ரா .. நான் அப்படி எல்லாம் இல்லைங்க , என்ன எல்லா எக்ஸாம்க்கும் ஒரே டிரஸ் தான் போட்டுகிட்டு போவேன் அவ்வளோ தான் :D :D காலேஜ் முதல் வருஷத்துல ஆரம்பிச்ச பழக்கம். அப்போ மூணு டிரஸ் ராசியான டிரஸ் எடுத்து வச்சிடுவேன் எக்ஸாம்குன்னு , அதனால மாத்தி மாத்தி போட்டாலும் தெரியாது. அப்படியே படி படியா மூணு ரெண்டாச்சு , கடைசி வருஷத்துல ஒன்னு ஆச்சு. கடைசி வருஷம் மூணே மூணு பரீட்சை, ஆனா என்னோட துரதிர்ஷ்டம் ரெண்டு எக்ஸாம் அடுத்தடுத்து. ஆனா அதுக்கும் முன்னாடியே என் நண்பர்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சு போச்சு. அதுக்கெல்லாம் கவலை படுற ஆள் இல்லை அப்போ. ஆனா இப்போ இங்க கம்பெனிக்கு வந்த பிறகும் அந்த பழக்கத்தை மாத்திக்கவே முடியல. போன சனி, ஞாயிறு ரெண்டு நாள் தொடர்ந்து MS எக்ஸாம். வழக்கம் போல ராசியான டிரஸ் போட்டாச்சு , ரெண்டாவது நாள் தான் ரொம்ப குழப்பமாகிடுச்சு , ஆபிஸ் நண்பர்கள் ஆச்சே கண்டுப்பிச்சா அசிங்கமாகிடுமேனு ஒரே கவலை. சரி வர்றது வரட்டும்னு துணிஞ்சு களத்துல இறங்கியாச்சு. என்னோட சீட்டும் கடைசிங்கறதால பிரச்சனை இல்லை. ரொம்ப சீக்கிரமாவே போய் உக்கார்ந்துகிட்டேன். யாரும் கேட்டுட கூடாது கடவுளே அப்படின்னு வேண்டிகிட்டு இருந்தேன். "Excuse Me" நிமிர்ந்து பார்த்தேன் , பக்கத்து சீட் பொண்ணு..பக்குனு ஆகிடுச்சு. இந்த பொண்ணு நேத்தும் இதே டிரஸ் தானே போட்டுட்டு வந்தா ????!!!!!!!!!!!!

#என்னை போல் ஒருத்தி

No comments:

Post a Comment