தேவதைகளின் நிச்சலனம்
சிறகு நனைத்த பறவையின்
மௌனத்தை
வெற்றிடங்களில் நிரப்புகிறாய்
நிரம்பி வழியும்
எல்லாவித கருணைகளிலிருந்தும்
ஒரு துளி விஷத்தை பிரித்தெடுக்கிறாய்
பைத்திய நிலைகள் அடர்ந்திருக்கும்
பின்னிரவுகளுக்கு
புன்னகையை பரிசளிக்கிறாய்
அன்பின் ரோமங்களை
படர விடுகிறாய்
அவை ஆயிரமாயிரம் காலம் பழமையானவை
அற்புதமான உளறல்..
ReplyDelete