அவளுடைய அவன்
அவளுக்கு அவன் மீது காதல்…அது என்றுமே தீராத காதல். ஒவ்வொரு நாளும் அவனை புதிது புதிதாக பார்க்கிறாள், பார்க்கும் நொடி எல்லாம் அவள்ளுள் புதிதாகவே காதல் பூக்கிறது.
அவனின் சிவந்த நிறத்திலும் ரோஜா கன்னங்களிலும் அவள் மயங்கி இருக்கிறாள். அவனின் சிவந்த தேகம் கண்டு அவள் கண்கள் நாணிச் சிவக்கும்.
அவன் இல்லையென்றால் அவளுக்கு ஒரு வேலையும் ஓடாது என்பதை அவள் அறிவாள், அதனாலேயே அவன் எப்போதும் இல்லாது போகாமல் பார்த்துக்கொள்கிறாள்.
அவனில்லாது போன பல நாட்கள் அவனுக்காக காத்திருக்கிறாள்.
அவன் அவளை அழ வைத்திருக்கிறான், சில நாட்கள் குறைவாக; சில நாட்கள் மிகுதியாக. அவளின் கண்ணீரும் அவனை நேசிக்கின்றது. அவன் மேல் அளவுகடந்து கொண்டுள்ள காதல் அவள் கண்ணீரையும் சில நொடிகளில் கரைத்து விடுகின்றது…
அவனை யாரவது தவறாக கூறினால், தாங்கமாட்டாமல் அவ்விடம் விட்டு நகர்ந்து விடுவாள்.
அவனிடம் அவள் நிறைய பாடங்களை கற்றிருக்கிறாள்; அதில், “தேட தேட ஒன்றும் இல்லாமல் முடியும் வாழ்கை பாடம்” அவளுக்கு மிகவும் பிடித்தமானது.
அவனை தவிர்க்க அவளுக்கு மனமே வராது..மற்றவர்கள் தவிர்த்தாலே அவள் தவிப்பாள்.
அவன் -
எத்தனை காயங்கள் அவளால் பெற்றாலும், என்றும் அவள் கையில் ஆசையாய் அடங்குவான்…. அவளின் “வெங்காயம்”
பி.கு Specially dedicated to அம்மா. அவங்களுக்கு வெங்காயம் ரொம்ப பிடிக்கும். :P
அவளுக்கு அவன் மீது காதல்…அது என்றுமே தீராத காதல். ஒவ்வொரு நாளும் அவனை புதிது புதிதாக பார்க்கிறாள், பார்க்கும் நொடி எல்லாம் அவள்ளுள் புதிதாகவே காதல் பூக்கிறது.
அவனின் சிவந்த நிறத்திலும் ரோஜா கன்னங்களிலும் அவள் மயங்கி இருக்கிறாள். அவனின் சிவந்த தேகம் கண்டு அவள் கண்கள் நாணிச் சிவக்கும்.
அவன் இல்லையென்றால் அவளுக்கு ஒரு வேலையும் ஓடாது என்பதை அவள் அறிவாள், அதனாலேயே அவன் எப்போதும் இல்லாது போகாமல் பார்த்துக்கொள்கிறாள்.
அவனில்லாது போன பல நாட்கள் அவனுக்காக காத்திருக்கிறாள்.
அவன் அவளை அழ வைத்திருக்கிறான், சில நாட்கள் குறைவாக; சில நாட்கள் மிகுதியாக. அவளின் கண்ணீரும் அவனை நேசிக்கின்றது. அவன் மேல் அளவுகடந்து கொண்டுள்ள காதல் அவள் கண்ணீரையும் சில நொடிகளில் கரைத்து விடுகின்றது…
அவனை யாரவது தவறாக கூறினால், தாங்கமாட்டாமல் அவ்விடம் விட்டு நகர்ந்து விடுவாள்.
அவனிடம் அவள் நிறைய பாடங்களை கற்றிருக்கிறாள்; அதில், “தேட தேட ஒன்றும் இல்லாமல் முடியும் வாழ்கை பாடம்” அவளுக்கு மிகவும் பிடித்தமானது.
அவனை தவிர்க்க அவளுக்கு மனமே வராது..மற்றவர்கள் தவிர்த்தாலே அவள் தவிப்பாள்.
அவன் -
எத்தனை காயங்கள் அவளால் பெற்றாலும், என்றும் அவள் கையில் ஆசையாய் அடங்குவான்…. அவளின் “வெங்காயம்”
பி.கு Specially dedicated to அம்மா. அவங்களுக்கு வெங்காயம் ரொம்ப பிடிக்கும். :P
குடிச்சி பார்த்தேன் ஏறவில்லை! படிச்சிப் பார்த்தேன் ஏறிருச்சி!
ReplyDeletepode hoyala...
ReplyDelete