பாவாடை நுனியில்
கடிக்கப்பட்ட
பாதி மிட்டாய்களின்
பிசினிலிருந்து எடுக்கபடுகிறது
நம் நட்புக்கான அஸ்திவாரம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடலும் கடல் சார்ந்த இடமும்
வனமும் வனம் சார்ந்த இடமும்
மலையும் மலை சார்ந்த இடமும்
என கூடும் பொழுதுகளில்
விரிகிறது
நம் நட்பும் நட்பு சார்ந்த இடமும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொடுக்காபுளிக்கு ஸ்லேட்டுக்குச்சி
தீப்பெட்டி அட்டைக்கு மஞ்சள் ரிப்பன்
பொட்டுக்கடலைக்கு அச்சுவெல்லம்
அட
நம்மிடமிருந்தே
உலகிற்கு அறிமுகமானது
பண்டமாற்றம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கல்லாங்கா , லகோரி
கோலிகுண்டு , கிட்டி புல்
தட்டாமாலை , ஐஸ்பாய்
விளையாட்டுகளுக்கும்
சலிக்கிறது
நம்மோடு
விளையாடி விளையாடி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காட்டுக்குள் இருக்கும்
அய்யனார் கோவிலருகே
சமைக்கப்படும்
கூட்டாஞ்சோறு
தீயில் எரிகிறது
உன் வீட்டு ஜாதியும்
என் வீட்டு மதமும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆலம் விழுதோடு போராடி
ஆற்று நீரில்
எருமைகளோடு ஊறி
புழுதிக்காட்டில் பிரண்டு
....... போராடி ஊறி பிரண்டு
திளைக்கிறது நட்பும் கூட
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் வீட்டிற்கு
நான் கூட்டிவந்த
நிலாவிற்கும்
என் வீட்டிற்கு
நீ கூட்டிவந்த
நிலாவிற்கும்
ஏழு வித்தியாசம்
சொல்லும்
நம் நட்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாங்காய்களும்
குருவி முட்டையும்
கள்ளி பழமும்
திருட திருட
நட்பும் சேர்ந்தே
இனிக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மயில் றெக்கையும்
சோளத்தட்டையும்
புளியங்கொட்டையும்
பொறுக்கி பொறுக்கி ....
பொறுக்கி பொறுக்கி ....
ச்சீ ச்சீ
பொறுக்கியான நட்பு
நம் நட்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதை நீ எடுத்தாயோ
அது இங்கிருந்தே
எடுக்கப்பட்டது
எதை நீ கொடுத்தாயோ
அது இங்கிருந்தே
கொடுக்கப்பட்டது
ஆம்
நட்பிலிருந்தே
கொடுக்கப்பட்டதும் எடுக்கப்பட்டதும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்வாறான
உவகை ஊட்டும்
பொழுதுகளில்
பால்வெளியில் மிதக்கிறது
நட்பும்
காற்றைப் போலவே
பி . கு : தொலைந்து போன பால்யத்தை பற்றி எழுதுவது மிகவும் சுவாரசியமானது. ஒவ்வொருவருள்ளும் பால்யத்தின் சிறு துளி ஈரம் ஒட்டிக் கொண்டு இருக்கும். அதுவும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம் போன்றது. கிரிக்கெட்டும் , ப்ளே ஸ்டேஷன்னுமாக உருண்டு பிரளும்
இக்கால குழந்தைகளுக்கு ஒரு முறையேனும் விளையாடி காட்டவேண்டும் கிட்டிப்புல்லும் , பம்பரமும் , கோலி குண்டும் ....................
நான் தொலைத்த பால்யமும் , பால்ய கால நட்பிற்கும் இந்த கவிதை சமர்ப்பணம்.
கடிக்கப்பட்ட
பாதி மிட்டாய்களின்
பிசினிலிருந்து எடுக்கபடுகிறது
நம் நட்புக்கான அஸ்திவாரம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடலும் கடல் சார்ந்த இடமும்
வனமும் வனம் சார்ந்த இடமும்
மலையும் மலை சார்ந்த இடமும்
என கூடும் பொழுதுகளில்
விரிகிறது
நம் நட்பும் நட்பு சார்ந்த இடமும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொடுக்காபுளிக்கு ஸ்லேட்டுக்குச்சி
தீப்பெட்டி அட்டைக்கு மஞ்சள் ரிப்பன்
பொட்டுக்கடலைக்கு அச்சுவெல்லம்
அட
நம்மிடமிருந்தே
உலகிற்கு அறிமுகமானது
பண்டமாற்றம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கல்லாங்கா , லகோரி
கோலிகுண்டு , கிட்டி புல்
தட்டாமாலை , ஐஸ்பாய்
விளையாட்டுகளுக்கும்
சலிக்கிறது
நம்மோடு
விளையாடி விளையாடி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காட்டுக்குள் இருக்கும்
அய்யனார் கோவிலருகே
சமைக்கப்படும்
கூட்டாஞ்சோறு
தீயில் எரிகிறது
உன் வீட்டு ஜாதியும்
என் வீட்டு மதமும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆலம் விழுதோடு போராடி
ஆற்று நீரில்
எருமைகளோடு ஊறி
புழுதிக்காட்டில் பிரண்டு
....... போராடி ஊறி பிரண்டு
திளைக்கிறது நட்பும் கூட
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் வீட்டிற்கு
நான் கூட்டிவந்த
நிலாவிற்கும்
என் வீட்டிற்கு
நீ கூட்டிவந்த
நிலாவிற்கும்
ஏழு வித்தியாசம்
சொல்லும்
நம் நட்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாங்காய்களும்
குருவி முட்டையும்
கள்ளி பழமும்
திருட திருட
நட்பும் சேர்ந்தே
இனிக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மயில் றெக்கையும்
சோளத்தட்டையும்
புளியங்கொட்டையும்
பொறுக்கி பொறுக்கி ....
பொறுக்கி பொறுக்கி ....
ச்சீ ச்சீ
பொறுக்கியான நட்பு
நம் நட்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதை நீ எடுத்தாயோ
அது இங்கிருந்தே
எடுக்கப்பட்டது
எதை நீ கொடுத்தாயோ
அது இங்கிருந்தே
கொடுக்கப்பட்டது
ஆம்
நட்பிலிருந்தே
கொடுக்கப்பட்டதும் எடுக்கப்பட்டதும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்வாறான
உவகை ஊட்டும்
பொழுதுகளில்
பால்வெளியில் மிதக்கிறது
நட்பும்
காற்றைப் போலவே
பி . கு : தொலைந்து போன பால்யத்தை பற்றி எழுதுவது மிகவும் சுவாரசியமானது. ஒவ்வொருவருள்ளும் பால்யத்தின் சிறு துளி ஈரம் ஒட்டிக் கொண்டு இருக்கும். அதுவும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம் போன்றது. கிரிக்கெட்டும் , ப்ளே ஸ்டேஷன்னுமாக உருண்டு பிரளும்
இக்கால குழந்தைகளுக்கு ஒரு முறையேனும் விளையாடி காட்டவேண்டும் கிட்டிப்புல்லும் , பம்பரமும் , கோலி குண்டும் ....................
நான் தொலைத்த பால்யமும் , பால்ய கால நட்பிற்கும் இந்த கவிதை சமர்ப்பணம்.
No comments:
Post a Comment